இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படும் தமிழர் காணிகள் – அம்பலப்படுத்திய வசந்த முதலிகே!

திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தைப் போன்றே அதுவும் சிறந்த பிரதேசம் என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்போது திருகோணமலையில் குறித்த காணிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 3500 குடும்பங்களை வெளியேற்றுவது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply