மர்மமானமுறையில் கரையொதுங்கும் கடல் ஆமைகளின் சடலங்கள் ! தொடரும் விசாரணை !

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள் நீருக்கடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜா-எல முதல் பாணந்துறை வரையான கரையோரங்களில் மொத்தம் 25 ஆமைகளின் சடலங்களும் 2 உயிருள்ள ஆமைகளும் காணப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடற்கரையில் உள்ள கடல் ஆமைகளின் ஓடுகளில் கடுமையான வெடிப்பு காணப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சில ஆமைகள் இறந்ததற்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

சில தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களால் இந்த வெடிப்பு ஏற்பட்டதா என்பதை கண்டறிய வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சடலங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் குறித்த ஆமைகளின் மரணத்திற்கான சரியான காரணம் விரைவில் நிறுவப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நான்கு நிறுவனங்கள் கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன் , அடுத்த சில நாட்களுக்குள் அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply