ராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி உள்ளிட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசால் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 4 பேரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்கள் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply