கொழும்பில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்திற்கு தடை!

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கம், அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கோட்டை, கொம்பனி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிகழவுகளை நடத்த தடை விதித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply