SLC க்கு  கிடைத்த நிதி குறித்து ஆராயப்பட வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர்!

திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கப்பெறும் நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை உலகில் எந்த அணியையும் தோற்கடிக்கும்  திறமையும் தற்போதைய தேசிய கிரிக்கெட் அணிக்கு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியை இலகுவாக தோற்கடிக்கும் திறன் கொண்டிருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போதைய அணியிலும் இந்த திறமையை மீட்டெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply