கொள்ளுப்பட்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 5பேர் பலி!

கொழும்பில் இன்று காலை பேருந்து ஒன்றின்மீது  மரம் விழுந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இரண்டு பயணிகள் இன்னும் உள்ளே சிக்கியுள்ளதாகவும்  அவர்களை மீட்கும் நடவடிக்கையை பொலிஸாரும் விமானப்படையினரும் கூட்டாக ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பெட்டாவிலிருந்து  தெனியாய நோக்கிப் புறப்பட்ட பேருந்து, கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த கோர விபத்தை அடுத்து டூப்ளிகேஷன் வீதி போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதுடன், தற்போதைக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply