தேடப்பட்ட கொலை சந்தேக நபர் STF உடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்!

மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சுட்டுக் கொல்லப்பட்ட 42 வயதான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான பாதாள உலக நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு வந்துள்ளது.

குறித்த  நேரத்தில், சந்தேகத்திற்குரிய நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை பணியாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார், அவர்கள் திருப்பித் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் குறித்த சந்தேக நபர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அண்மையில் காலி, கரகொட பிரதேசத்தில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர்,  மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்  தொடர்புடைய நபரே  இவ்வாறு  உயிரிழந்தவர் சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply