கிளிநொச்சியில் கோர விபத்து! இளைஞர் பலி!

கிளிநொச்சி – கோனாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே  குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த  விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே  குறித்த இளைஞன்   உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply