சற்று முன்னர் காங்கேசன் துறையை வந்தடைந்தது கப்பல்!

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சற்று முன்னர் பிற் பகல் 12.20 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா மற்றும் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்தியாவின் நாகை துறைமுகத்திலிருந்து இன்று காலை 7மணியளவில் பயணத்தை ஆரம்பித்து சற்று முன்னர் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply