பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தெனியாய, அக்குரஸ்ஸ, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதோடு குறித்த பகுதிகளில் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply