பாரிய விபத்தில் சிக்கிய பௌத்த பிக்கு உட்பட 12 பேர்!

தெல்தெனிய மொரகஹமுல – கல்மல் ஓயா வளைவுக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பௌத்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹசலக கொலங்கொட கங்காராம விகாரைக்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply