நிலத்தகராறில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த போது, ​​இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

நெல் வயலினால் ஏற்பட்ட சொத்து தகராறே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, பண்டாரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply