பேருந்து – முச்சக்கரவண்டி விபத்து- 13பேர் படுகாயம்!

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து களுத்துறை, நாகொட, பிரதேசத்தை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply