யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய இழுவைமடிப் படகுகளைக் கட்டுப்படுத்த கோரியே யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply