மகிந்தவுடன் விருந்து கொண்டாட்டத்தில் ரணில்!

பொருட்கள் மற்றும் சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அலரி மாளிகையில் இந்த விருந்துபசாரம் நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் நடத்திய விருந்தில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் பெருமளவான அமைச்சர்கள் கலந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே சஜித்பிரேமதாச இந்த விடயத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

வற் வரியை அதிகரிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் விருந்தில் கலந்து கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply