கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கோடி ரூபா பெறுமதியான மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வரி செலுத்தாமல் கொண்டு வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு வர்த்தகர்களும் அனைத்து விமான நிலைய சோதனைகளையும் கடந்து இந்த பொருட்களை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்லும் போது, ​​விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் இவர்களை கைது செய்தனர்.

இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply