சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!

நேற்றையதினம் இரவு காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை இந்திய இழுவை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதைக் கண்டறிந்த வட கடற்படைக் கட்டளை இந்திய இழுவை படகுகளை விரட்டியடிக்க விரைவுத் தாக்குதல் கப்பலை அனுப்பியது.

இந்த நடவடிக்கையில், 14 இந்திய மீனவர்களுடன், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்து இருந்ததால், கடற்படையினர் இந்திய இழுவை படகை பிடித்து வைத்திருந்ததாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், மீன்பிடி படகும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதுவரை 2023 ஆம் ஆண்டில், கடற்படையினர் 35 இந்திய இழுவை படகுகளை கைப்பேற்றியுள்ளனர் மற்றும் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதால் 240 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர், சட்ட நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply