மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் மாயம்!

லொக்கல்ல ஓயாவில் படகில் மீன்பிடிக்கச் சென்ற இருவரில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் மீகஹகிவுல, கரமெடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்.

காணாமல் போனவரைத் தேடும் பணியை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply