பொலன்னறுவையில் யானைதாக்கி நபர் ஒருவர் பலி!

பொலன்னறுவையின் வெலிக்கந்தை பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று இரவு காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்த போது யானை தாக்கியதை அடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கந்தை பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய வசந்த பண்டார என்ற நபரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply