தம்புள்ளை வீதி விபத்தில் இருவர் பலி, 9 மாத குழந்தை படுகாயம்!

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் தம்புள்ளை விஹார சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு கண்டலம பகுதியிலிருந்து தம்புள்ளை – கண்டி பிரதான வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த பெண் ஒருவரையும் வீதியோரம் நின்றிருந்த ஆண் ஒருவரையும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் பெண் வைத்திருந்த 9 மாத குழந்தை தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும், 43 வயதுடைய பெண் வசிக்கும் இடம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் சாரதியும் படுகாயமடைந்து பொலிஸ் காவலில் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply