வவுனியாவில் பணியாளர் மீது உரிமையாளர் கத்திக் குத்து!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவர் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த பணியாளர் அன்றைய நாள் இரவு வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், குறித்த பணியாளருக்கும் இடையில் நேற்று  அதிகாலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் பல இடங்களில் குத்தியதாக பாதிக்கப்பட்ட பணியாளர்  வவுனியா பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதேவேளை,  காயமடைந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply