யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி!

புத்தளம் – கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவரும் ஆனமடுவ, ஊரியாவ பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர், நாளாந்தம் காலை உணவு எடுப்பதற்காக தனது வீட்டுக்கு சென்றுவரும் நிலையில், சம்பவம் தினத்தன்று காலை உணவு எடுப்பதற்கு வீட்டுக்கு வருகை தராததால் , அவரது மனைவி அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காமையினால், சந்தேகமடைந்த மனைவி அவர் இருந்த இடத்திற்கு வருகை தந்து பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply