இரத்தினக்கற்களை கடத்த முயன்ற இலங்கை பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இலங்கைப் பயணி ஒருவர் நாட்டிலிருந்து கடத்த முயன்ற இரத்தினக் கற்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் சென்னைக்கு விமானம் ஏறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த பயணியின் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 482.02 கிராம் எடையுள்ள ரத்தினக் கற்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனர்கள் மூலம் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக கார்பன் காகிதத் தாள்களில் ரத்தினக் கற்கள் சுற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ரத்தினக் கற்கள், சுமார் 1.6 மில்லியன் ரூபாய் பெருமதிவாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply