மருமகனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மாமனார் கொலை!

வவுனியா, சித்தம்பராபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் நேற்று  மாலை ஏற்பட்ட வீட்டு தகராறில் அவரது மருமகனால் தோட்டத்து மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் மனைவியைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்த நிலையில், மருமகனால் தோட்டத்து மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 22 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை சித்தம்பராபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply