இந்தியாவில் ரயில் விபத்து:5 பேர் மரணம் 30 பேர் படுகாயம்!

மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் இரயிலுடன் சரக்கு இரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது வழங்கப்பட்ட சமிக்ஞையில் நிற்காமல் பயணித்த சரக்கு இரயில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் இரயிலில் மோதியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டதோடு இந்த விபத்தில் 30 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து , வைத்தியர்கள், மீட்பு பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply