அரச புலனாய்வு பிரிவினால் 17 பேர் கைது!

யாழ். நெல்லியடி பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி – துன்னாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரச புலனாய்வாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்,குறித்த 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், சட்டவிரோத மதுபானமான விற்பனையாளர்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என 17 பேர் செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து , கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply