அதிசொகுசு பேருந்து விபத்தினால் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

குருநாகல் மெல்சிரிபுர பகுதியில் நேற்றிரவு (16) மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்தும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறி புற பொலிஸார் தெரிவித்ததோடு விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply