தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தபால்மூலம் வாக்கு பதிவு செய்யவுள்ளவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை உரிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி , குறித்த விண்ணப்பதாரர்கள், ஓகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இதனைத்தொடர்ந்து , அன்றைய திகதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனையின்றி நிராகரிக்கப்படும் என, தேர்தல் ஆணைக்கு தலைவர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply