ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குழு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னிறுத்தப்படும் வேட்பாளருக்கு பதிலாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கின்றது.

இதன்படி, ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுராதபுரம் மாவட்ட தேர்தல் நடவடிக்கை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply