லொறி மோதி விபத்து- 8 வயது சிறுமி பலி!

பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய – அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே நேற்று (05) மாலை ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply