தமிழ்நாட்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு 22 ஆண்டுகள் சிறை!

13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழ்நாட்டின் மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இலங்கைத் தமிழருக்கு, நேற்று இராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட அண்டனி மார்க்ஸ் என்னும் 52 வயதுடைய நபர், கடந்த ஜனவரி 2022 இல் சிறுமியைத் தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ விதிகளின் கீழ் பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத்தால் குற்றவாளிக்கு 5,000 இந்திய ரூபாய்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத்தை செலுத்தத் தவறினால் குற்றவாளி மேலும் 6 மாதங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் இந்திய ரூபாய்கள் இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply