நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு..? அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றமையை அடுத்து நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு பதிலளித்தே அவர் மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply