இந்திய-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக  யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான அலையன்ஸ் எயர் மூலம் இயக்கப்படும் 100 ஆவது விமானச் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

இந்தியா மற்றும் இலங்கை இடையே சிறந்த தொடர்பினை பேணுவதற்கு போக்குவரத்து மிக முக்கியமான ஒன்று. அந்தவகையில், அந்த போக்குவரத்தை மேம்படுத்த இரு நாட்டு அரசுகளும் முயற்சிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply