வீட்டில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது..! யாழில் சம்பவம்

யாழ் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன்துறை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக காங்கேசன்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றது.

குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.

அதன் போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply