யாழ் பளையில் வீடுடைத்துத் திருட்டு

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடி சென்றுள்ளனர்.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம், நள்ளிரவு வேளை வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து, உட்சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கிவிட்டு நகை, பணம் மற்றும் கைத்தொலைபேசியைத் திருடிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply