வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாப பலி!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பறையநாலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னாட்டி பகுதியிலேயே இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கன்டர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா – கன்னாட்டி பகுதியில்  தாயும் அவரது 6 வயதான மகளும் பாடசாலை செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே, கன்டர் ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே உயிரிழந்துள்ளனர்.

இன்றைய தினம் காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்குச் செல்வதற்காகக் தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி வேகமாகப் பயணித்த கன்டர் வாகனம் வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் நின்றவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மற்றுமொரு சிறுவன் கன்டர் வாகனத்தைக் கண்டதும் ஓடிச்சென்றமையால் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் மூவர் பயணித்துள்ளனர். விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை விபத்தையடுத்து மக்கள் வாகனத்தை சரமாரியாகத் தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கும் முற்பட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பறையநாலங்குளம் பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply