பிளவடைகிறதா பிரதான எதிர்க்கட்சி – கட்சி தாவல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் நிலையில், தற்போது, அவருக்கான ஆதரவு பெருகி வருகின்றது என அக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் வந்துவிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது, சஜித் கூட்டணியில் இருப்பவர்களும் ரணிலை ஆதரிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ரணில் பக்கம் வந்துவிடும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பி.ஹரிசன் முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்திருந்த நிலையிலேயே தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply