அதிபரை தாக்கிய மாணவரின் தந்தை!

அம்பலாங்கொடை பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய மாணவரின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் அதிபர் காவல்துறையினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

விளையாட்டு போட்டி ஒன்றின் போது தமது மகன் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதை அடுத்து குறித்த மகனின் தந்தை அதிபரிடம் வினவுவதற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னதாக ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply