வீடுபுகுந்து திருட முற்பட்டவர் கைது

வவுனியா பத்தினியார் மகிளங்குளம் பகுதியில் வீடு புகுந்து, பொருட்களை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் வீட்டினுள் புகுந்து திருட முட்பட்ட வேளை,வீட்டிலிருந்தவர்கள் கத்திக் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தவேளையில், அயலவர்கள் அவரை பிடித்துத் தாக்கி,பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply