வவுனியாவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் 46 வயதுடைய செல்வம் தவேந்திரன் என்பவர் மீது நேற்று இரவு வாள்டெ்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினரே குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது, கிராம மக்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த விசேட அதிரடிப்படையினர் பண்டாரிக்குளம், மகாறம்பைக்குளம் மற்றும் வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரை கைது செய்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வாள்வெட்டில் ஈடுபட்டவர்களின் ஜீப் வண்டி மீட்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து இரு வாள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply