பொலிஸ் வேடமிட்டு இளைஞனை கடத்திய இராணுவத்தினருக்கு நேர்ந்த கதி!

பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து இளைஞன் ஒருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அவருடன் இருந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் கொழும்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​இரண்டு பேர் முச்சக்கரவண்டியில் வந்து தாங்கள் பொலிஸ் அதிகாரிகள் என்று கூறியதுடன் ,குறித்த இளைஞனை போதைப்பொருள் வியாபாரி எனவும் அதனால் அவரை ,அழைத்து செல்லவேண்டும் எனவும் கூறி இழைத்து சென்றதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவ வேளை ​, வீதியின் அருகே கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தியதையடுத்து, இளைஞன் தான் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து இளைஞன் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply