பாராளுமன்ற விசேட குழு – சாகர காரியவசம் தலைவாராக நியமிப்பு! சபையில் குழப்பம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தலைமையில் பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிதி திவால்தன்மைக்கான காரணங்களை ஆராய்ந்து, நாடாளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் இந்த குழுவிற்கு சாகர காரியவசம் தலைமை தாங்குவார் என சபாநாயர் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்த நியமனம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் ஆளும் – எதிர்த்தரப்பினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இன்று காலை நாடாளுமன்றில் சபாநாயர் இந்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பான தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க எதிர்க்கட்சியினரே முதலில் யோசனையை முன்வைத்ததாகவும், இந்த நிலையில், ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவரை இதற்கு தலைவராக நியமித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இது திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்கும் கதையைப் போன்றது என்றும் அவர் விமர்சித்தார்.

எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரையே இந்த தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் இதற்கான பெயர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply