வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட இராணுவ சீருடைகள் – தலைமறைவான சந்தேக நபர்!

காலி, போகஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கை இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மேற்கொண்ட சோதனையின் போதே இந்த சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இராணுவ சீருடைகள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply