ஆலயத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் – பெண்கள் உட்பட மூவர் படுகாயம்!

வெள்ளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் வெள்ளாங்குளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு சென்று விட்டு உழவு இயந்திரத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது வீதியில் தடைகளை ஏற்படுத்தி மற்றுமொரு குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளாங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply