செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக களமிறங்கிய முஸ்லிம் அமைப்புக்கள்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக முஸ்லிம் அமைப்புக்கள் சில கருத்துகளை வெளியிட்டுள்ளன.

காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகர் பதவி வெற்றிடத்துக்கு தகுதியுடைய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அதற்கு எதிராக நசீர் அஹமட் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும் இந்த விடயத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமானால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை சில முஸ்லிம் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.

முன்னதாக காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டிருந்த நிலையில், அந்தப் பதவிக்கு இலங்கை கல்வி சேவை தரம் 3 இற்கு(SLEAS GRADE 3) தகுதியுடையவர்கள் இல்லாமையால், தற்காலிக அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 இற்கு (SLPS GRADE 1) தகுதியுடைய M.M.அலாவுதீன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) படிப்பை நிறைவு செய்திருந்த A.G. மொஹமட் ஹக்கீமுக்கு கோட்டக் கல்வி அலுவலகர் நியமனம் தற்போதைய கல்வி அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்டது.

எனினும் அமைச்சர் நசீர் அஹமட், தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த இலங்கை அதிபர் சேவையின் தரம் 1( SLPS GRADE 1) தகுதியுடையவர் தொடர்ந்தும் இந்தப் பதவியில் இருக்க வேண்டும் எனவும் இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) நிறைவு செய்தவருக்கு கோட்டக் கல்வி அலுவலகர் நியமனம் வழங்கக் கூடாது எனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, கல்வி அமைச்சின் செயலாளரால் குறித்த விடயம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமைக்கமைய, ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுடையவருக்கு இந்நியமனம் வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நிலையிலேயே குறித்த நியமனம் காத்தான்குடி கல்வி வலயத்திற்கு காத்திரமான கல்வி அபிவிருத்திக்கு வழிவகுத்துள்ளது என முஸ்லிம் அமைப்புக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply