பிள்ளையான் தரப்பினரால் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவரே தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மன்னம் பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சாரதிகளின் பிரச்சினை தொடர்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டனர்.

அதனையடுத்து போராட்டக்காரர்களால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும் நையப்புடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply