இந்தியாவிற்கு புறப்பட்டார் ரணில்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான சாந்தனி விஜேவர்தன, பதில் செயலாளராக இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply