வவுனியாவில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து!

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பறநாட்டகல் பகுதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை முருகண்டியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பாரவூர்தி பறன்நாட்டகல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply