தமிழர்களுக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!

இலங்கை தமிழர்களுக்கான 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியால் இலங்கை தமிழர்களுக்காக போராடி பெறப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் சரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடும் போது 13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிலங்களைப் பறிப்பதும், பொலிஸ் அதிகாரத்தை பறிப்பதுமே இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்க வழி வகை செய்யும் 13 ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்தும் முடக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply