பொலிஸ் விசாரணை தாமதம் – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

மாசியப்பிட்டி, கொம்பணிபுலம் மானிப்பாய் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்கு புகுந்த இனம் தெரியாத நபர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்ட பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இளையகுட்டி தர்மலிங்கம் என்ற நபர் காயங்களுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வீட்டின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது

தனிப்பட்ட பிரச்சினை ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த தாக்குதல் சம்பவ மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply